Tuesday, January 1, 2013

என் கவி நின்று போகட்டும்

முதல் வாசகியின்
முன்னுரைக்கே
மூக்கின் மேல் கோவம்
உனக்கு..
உன்னையும்
உனக்கான என்னையும்
நம்மிடையேயான
இந்தப்
பேதை வாசகியையும்
என் கவியையும்
காப்பாற்றிச் செல்வது
பெரும்பாடாகிப் போகிறது..
பேசாமல்
ஞானப்பாடல் எழுதப்
போகட்டுமா?
இல்லாவிட்டால்
இசைக்கு இசைந்து
இலவச
கலாச்சார இழிவு
செய்யப் போகட்டுமா?
என்
அதிக பட்சப்
பிழை என்ன கண்ணம்மா?
உனக்கான
என் வாழ்க்கையை
கவிதையிலேயே
வாழ்ந்து கழிப்பது தானே?
நீ மீண்டு வா
நானும்
என் கவிதையும்
உன்னுள்
நின்று போகிறோம் ..
நமக்கான
கவிதைகளின்
கல்லறை
காதலர்களால்
கோவிலாக்கப்படும் ..
...
நானும்
என் நடுநிசியும்
சோர்ந்து போய்
சுருண்டு விழட்டும் ...
நிலவும்
நீல வானும்
மழையும்
நீள் மலையும்
ஏன்
எதுவும்
என்னுள்
கவிஎழச்
செய்யாது போகட்டும்..
என் நா
வறண்டு
உனக்கான
வார்த்தையற்ற
ஒலிக்கவிதையை
ஓயாமல்
ஒப்பாரி வைக்கட்டும் ..
..
இதைப்பார்த்து
என் முதல் வாசகி
மூர்ச்சை அடையட்டும்...
....
நீ மீண்டு வா
கண்ணம்மா
..

நானும்
என் கவிதையும்
உன்னுள்
நின்று போகிறோம்
.......


No comments:

Post a Comment