Friday, March 29, 2013

காத்தா இருக்கேன்..

மூச்சுமுட்ட
நீருக்கடியில்
முங்கியிருக்கும்போது
மயங்கிய ஒளியில்
தெளிவின்றி கண்ட
உன் கால் கொலுசின்
பிரகாசத்தில்
முத்தெடுத்து - நான்
வெளிவருகையில்
மீண்டும் எனக்குள்
ஒரு புதிய கவிதை
பிறந்து வெளி விழுந்தது
...
கரையில் காலாட்டி
உட்கார்ந்து எளிதாய்
என் கவியை
விமர்சனம் செய்வதாய்
மேலும் கீழும் பார்த்தாய்..
...
எடுத்த முத்தையே
உனக்குப் பரிசளிக்க
துணைக்கு மலர் தேடி
சுற்றுமுற்றும் பார்க்கையில்
எருக்கம்பூ தவிர
ஏதுமில்லை, என்ன செய்ய?
...
பால் வடிய
பக்குவமா - உன்
பளிங்குப் பல் பார்த்து
தரை மறந்து நடந்து
தடுக்கி விழுந்து
உன் ஒட்டு மொத்த சிரிப்பையும்
ஒரு நொடியில்
உதிர வைக்க
சுத்தி நின்ன மரமெல்லாம்
சில்லுனு சிலிர்த்துப் போச்சு..
...
அன்னிக்குப் பார்த்த
அதே முகம் தான்
இப்ப வரை நெஞ்சுக்குள்ள
கூடு கட்டிக் குடியிருக்கு..
...
ஏதேதோ கோவத்துல
பேசாம இருக்கியே?
என்ன கொஞ்சம்
நெனச்சுப் பாரு..
...
குங்குமம் தொட்டு வச்சு
என்னோட ஆக்கினப்ப
எதுக்காக ஒரு துளி
தண்ணி விட்டு ஒட்டிகிட்ட?
...
சாமி டாலர் போட்டு
'இது தான் டி தாலி'ன்னு
பாசமா சொன்னப்ப
பட்டுன்னு கால் புடிச்சு
நெஜமா பொஞ்சாதி ஆயிட்ட..
...
இப்ப
கொஞ்ச தூரம் போனதுக்கு
கோவிச்சு மூஞ்ச தூக்கி
மௌனத்தில நீ இருந்தா
நான் எங்க போக?
என்ன செய்ய?
..
விதி வசந்தான்
நா இங்க, நீ அங்க..
காத்தா இருக்கேன்
மூச்சா இருக்கேன்
முழுசா இருக்கேன் -நான் இங்க
ஏங்கி இருக்கேன் - நீ அங்க
என் உசிர தாங்கி இருக்க..
பத்திரமா பாத்துக்க
முத்தெடுத்த காதலுக்குப்
பரிசா சாமி தந்த சொத்த..
..
சீக்கிரமா வந்துருவேன்
பேசாம மட்டும் இருக்காத
அன்னந்தண்ணி எறங்கல
அனாதையா நான் இங்க
...



2 comments:

  1. kaathiruppin sugaththai anubavikka polum indha kaaththiruppu... illai endraal, indha kaaththiruppu endro kaalaavathi aaahi irukkum... vaazhthukkal....

    mounaththin iRaichalai ketkka mudiyaaathu...

    vaalththukkal....nalla irukku

    ReplyDelete
  2. தலைவா பின்னிட்டிங்கா , அந்த சாமி டாலர் வரும் அந்த குறிப்பு கிளாசிக் சூப்பர்ப் . . . மொத்த வரிகளும் சூப்பர்ப்

    ReplyDelete