Tuesday, October 4, 2011

வறுமை

ஈரம் பார்க்காத தலை,
ஈரம் மட்டுமே பார்த்த கண்கள்
தூரம் பார்த்திருந்த வாழ்க்கை
வற்றிப் போன கிணறு
வற்றாத உணர்வு..
பல்கிப் பெருகும் எச்சில் ,
மல்கி உருகும் மார்பு
தொடை இழந்த நடை
இடை இழந்த பிள்ளை
இன்னும் இருக்கிறது உலகம்
நாங்கள் யாரும் இல்லாமல்...

No comments:

Post a Comment