Thursday, October 13, 2011

அணில்

இன்றைய வண்டிச் சக்கரத்தின்
இடையே மாட்டிய அணில்
என்
கல் நெஞ்சை கசக்கிப் போனது ..
எடுத்துக் கொணர்ந்து
எண்ணெய் தேய்க்கையில்
ஏனோ என் கண் நனைந்தது ..
சுவாசத்திற்கு எங்கும்
அணிலோடு
தீர்ப்பிற்காக ஏங்கும்
என் மனம் ..
இக்கணம் ,
இம்மை மறுமை
எல்லாம் கடந்து
எங்கோ கால வெளி கடந்து
முப்பரிமாணத்தில்
என் முகம் தொலைந்து கொண்டிருக்கிறது..

No comments:

Post a Comment