Thursday, August 30, 2012

கவிதையின் இருத்தல்....


உடைந்து போன
நொடிகளுக்குள்
உள்ளதைத்தேடி ஒரு பயணம்...
வினாக்களின் மத்தியில்
வீற்றிருக்கும்
விந்தையான விடைகள்...
கனாக்களை நெருங்கவிடாத
கற்பனை கணங்கள்..
எத்தனை என்றோ
எப்படி என்றோ
ஏன் என்றோ
தெரியாமல் நிகழும்
அடுத்தடுத்த ஆச்சர்யங்கள்...
அடிமனதின் அடுக்குகளுக்குள்
பதிந்துபோன அகராதி..
தொடர்ந்து போக
ஆளில்லா முற்றுப்புள்ளி...
வேடிக்கையாகிப்போன
வாடிக்கைகள்..
வாடிக்கையாகிப் போகும்
வேடிக்கைகள்..
இலக்கணம் இசைந்து
இயல்பாய் நிற்கும்
இஷ்டமற்ற கவிதை...
வரையறைக்குட்பட்ட வாசகன்...
வரம்பற்று திமிரிநிர்க்கும்
வார்த்தைகள்..
நினைத்தன முடிக்கும்
முடிவிலா மூர்க்கம்
வேகத்தடை போட
வழக்கமான வர்க்கம் ...
முன்னேறிச் செல்வது
மட்டுமே தெரிந்த தலைக்கனம்..
முட்டுக்கட்டையாக
அட்டைக்கத்திகள்...
நட்பு பாராட்டும் நளினம்...
எப்பொருள் கேட்பினும்
ஏற்றுக்கொள்ளா ஏளனம்..
எவர் வரினும்
எதிர்கொள்ளும் எண்ணம்...
விளைவு பாரா முகம்..
விழைந்து பார்க்கும் அகம்...
ஒவ்வொரு கவிதையின் பிறப்பும்
இத்தனை தாண்டியே நிகழ
இன்னும் இருக்கிறது உலகம்..
கூடவே நானும்...

No comments:

Post a Comment