Monday, August 27, 2012

நினைத்த பொழுதுகளின் மிச்சம் ...



காற்று நின்று போன தருணம்
நேற்று இன்று நாளை
அற்ற சூன்யம்
ஈரம் தேடி
களைத்துப் போன
கனவுகளின் அடிவாரம்
நித்திய நித்திரையை தொலைத்து
நான் ...
நிதர்சனங்களும்
நிராசைகளும்
மாறிமாறி
எனைப்பார்த்து
கேலி செய்வதாய்த் தோன்ற
காட்சிப் பிழையா என
கண்மூடி
நம்பிக்கையுடன் நான்...
தோற்றுப்போன தருணங்களை
தொலைவிலேயே வைத்து
இதமான இதயங்களை
இம்சித்து இரசித்து
இலகுவாக நடித்து
இருந்துவந்தவன் நான்..
இறந்துவந்தவன் நான்...
இனியும் இருக்குமா என்ற
எதிர்பார்ப்புகளிலேயே
ஏகாந்தத்தை
இரசித்துக் கிடந்தவன் நான்...
நான்
நான் மட்டுமன்று..
நீயும்தான் ...
நீ நினைத்த பொழுதுகளின் மிச்சம்
நான்...

No comments:

Post a Comment