Sunday, August 26, 2012

வா கொன்று போ ...

என்ன சொல்ல ?
எனைத் தேடி வந்த
வார்த்தைகள்
எனைக் கண்டுகொள்ளாமல்
எங்கேயோ சிதறிப்போக
நான் மட்டும் தொலை தூர
வருகைகளை எண்ணி
வருந்தியிருக்கிறேன் ...
முற்றுப்பெறாமல் போன
முந்தைய கவிதைகளை
முடித்து வைக்க
முடிந்தால் வந்து போ...
பாதி இறந்து போன பார்வைகளும்
மீதி மிச்சங்களும்
உன் ஒரு நொடி
தலை குனிதலையும்
ஈரமிக்க கண்ணீர் துளியையும்
கண்டு பின்
மாய்ந்து போகும்...
எனக்கான உன் ஓர் நொடி
எண்ணம் கூடவா
இல்லாமல் போயிற்று ?
இல்லை
தவிர்க்க எண்ணி
எண்ணாமலேயே  இருக்கிறாயா ?
உன் ஒவ்வொரு தவிர்த்தலிலும்
என் உயிர்
உதிர்ந்து போய்த் தீரும்...
இது தெரிந்தும்
நீடிக்கும் உன் மௌனமும்
திமிறும்
மென்மையின் சான்றான
உன் பெண்மையை
கொச்சைப்படுத்தும் ...
ஒன்று
என் கவிதையை முடித்து வை..
இல்லை
என்னை முடித்து வை..
உனக்கான காத்திருத்தல்
ஒவ்வொரு நொடி
சிலுவையறைதல்....
வா...

No comments:

Post a Comment