Sunday, August 26, 2012

வா கொன்று போ ...

உள்ளூர உறைந்திருக்கும்
உணர்ச்சிகளை உதிர்ப்பதும்
வெள்ளாவி வைத்து
மீண்டும் விதைப்பதும்
என் ஆவி
உயிர்ப்பிப்பதும்
உன் மேனி சிலிர்த்து பின்
மறைப்பதும்
சாதாரணம் அன்று கண்ணம்மா
சாகும் தருணம்..
பிறந்திருக்க வேண்டிய
எத்தனையோ புனிதங்களை
மறந்திருக்கிறாயா ?
இல்லை விரும்பி
மறைத்திருக்கிறாயா ?
உனக்குள்
தோண்டிப்பார்க்கும் என்
ஒரே ஆயுதம்
இன்று அடுத்த பதத்திற்காக
பதுங்கியிருக்கிறது ..
உன் உடைபடாத கண்ணாடி
என் கவிதை
என்பதை மறந்துவிடாதே ...
நேற்றைய மாலை
நமக்கான
முதல் மாலையை
நினைவூட்டிச் சென்றது...
யாருமற்ற புல்வெளியும்
ஈரப்பூங்காற்றும்
மஞ்சள் மாங்கல்யமும்
மயங்கிய உன் கண்களும்
இனியொரு முறை
சாத்தியமன்று....
படைப்பில் களைத்த
இறைவனின் இடைவேளையில்
உனை நான்
செதுக்கிய தருணம் அது...
என் ஜீவன்
உன்னுள் இறந்துபட
எத்தனை முறை
முயன்றிருந்தது...
இன்னும் ஒரு
வாய்ப்பு கொடு
என்னை
உன்னுள்
கொன்றுகொள்கிறேன் ...
வா ...

No comments:

Post a Comment