Wednesday, January 4, 2012

கவிதைக் காதல்

நிறைய பார்த்தலை விட
நினைத்துப் பார்த்தல் சுகம்!

உனக்கான இன்றைய
காத்திருத்தலில்
நாளைய கவிதை கருவானது!

உன் உதடு துடிப்பும்
என் இதயத் துடிப்பும்
எப்படி
ஒரே நேரத்தில் சாத்தியம்?

கண் மூடினாலே
வந்து விடுகிறாயே
நீ என்ன
நிகழ் காலத்தின் நித்திரையா?

நமக்கான மௌனம்
நமக்குள்ளே முடியும்!
.
.
இப்படித்தான்
என் கவிதைக்கு
உன் மேல் காதல்!
காவியமாகி விட்டது!

No comments:

Post a Comment