Wednesday, January 4, 2012

காதல் சூல்

விதையில்லா விருட்சம்
உன் கண் !
உன் பார்வைப் பூக்களின்
மகரந்தம் - எனை
காதல் சூல்
கொள்ளச் செய்தது !
ஆண்மையிலும் தாய்மை - உன்
அரை நொடிப் பூத்தலில்!
மணமாகுமுன்னே
மயக்கமும் மசக்கையும்
எனக்கு!
உன் குழந்தையை
காப்பாற்றவாவது
கட்டிக் கொள் - எனை
காதல் கொள் !
.
.
.
இன்னும்
கொடி அறுக்காமல்
வளர்கிறது!
நீ போட்ட
விதையில்லா விருட்சம் !
அடுத்த இமைத்தலுக்குள்
என் ஆயுள் முடிய
வரம் கொடேன்!

No comments:

Post a Comment