Wednesday, January 4, 2012

காதல் கவிதை

உனைப் பற்றிய
என் கவிதைகளில்
இலக்கணப் பிழைகள்
இருக்கத்தான் செய்யும்!
என் கவிதைகளை
நான் எழுதுவதில்லையே
நீயே எழுதிச் செல்கிறாய் !
.
.
காதலின் முடிவிலா
கவிதை கேட்டார்கள்
நம் முதல் சந்திப்பை
பதிவு செய்து விடவா?
.
.
காகிதத்தில் அல்ல
உன்
கால் பதத்திலேயே
பிறக்கிறது
என் கவிதை!
.
.
உனைப் பார்ப்பதற்கு
முந்தைய - என்
கவிதை முயற்சிகள்
இப்போது
சிரிக்க வைக்கின்றன
.
.

No comments:

Post a Comment