Monday, May 1, 2017

பெருங்கவியுடன் ஒரு நடை

சில்லிடும் பனிமூட்டத்தினிடையே
பெருங்கவி ஒருவரோடு நடந்தேன்
அவரது அமைதி ஏனென்றேன்
அது மட்டும்தானே என்றார்
அமைதியிலிருந்து கவி எப்படி என்றேன்
அதிலிருந்துதானே என்றார்
அது சரி, ஆனால் எப்படி
என விழித்தேன்
தொலைதூரத்து மரக்கூட்டத்தை
சுட்டிக்காட்டி
அந்த ஒற்றை மரம் தெரிகிறதா என்றார்
அதன் தவம் புரிகிறதா என்றார்
இப்படித்தானே எப்போதும் என்றார்
இந்தப் பெருவெளிதானே
என் கவிதை என்றார்
சற்று யோசித்து
என் கவிதையா என்ன? என்றார்
வாழ்நாள் முழுதும்
பறவைகளைப் படிப்பவனுக்கு
ஏன் பறவைகளைப் பற்றி
எதுவுமே தெரியவில்லை என்றார்
அவர் விரல்களைப் பிடித்து
முத்தமிட எத்தனித்தபோது
சிறகடித்த ஓசை
என்னருகில்...

No comments:

Post a Comment