Tuesday, February 12, 2013

எதை நோக்கி கிருஷ்ணா?

உன் விழியசைவின்
வழிகாட்டுதலில்
விடியலை நோக்கிச்
செல்வதாய்
சென்ற என் நாட்கள் ...
மந்தையோடிருந்ததை
மறந்து நான்
நொடிதோறும்
வாழ்ந்து வாழவைத்து
சிறந்த மேய்ப்பனாக
உயர்ந்து
களமிறங்கி
வேட்டையாடி
வீரம் காட்டி
விமர்சனம் பல தாங்கி
வீழாது
வியப்பு மேம்படச் செய்து
வெற்றி நிலை நாட்டி
வேறுபல ஈர்ப்பு நோக்கி
வசதிக்காக சாய்ந்து
அசைந்து கொடுத்து
விளைவு வேண்டி
வளைந்து கொடுத்து
வசியம் செய்து
வன்மை ஆழப் பதித்து
பின் இயல்பாய்
எவர்நோக்கினும்
மேலவன் கண்டதாய்
வணங்கி
வணங்கச்செய்து
சிறந்த நடிப்புச் செய்து
சிந்தை பல
மனம் பலவற்றில்
ஊடுருவவிட்டு
உள்ளூரப் பதிந்து
உயிராகிப் போய்
பின்
சாதித்து சதித்து
ஏதுமற்ற நிலையில்
இருப்பதாய் சொல்லி
நகர்ந்து போய்
நிலைகுத்திய விண்ணில்
கவிதை புனைந்து
கடும் சோகத்தில் ஆழ்ந்து
அதிலேயே நீடித்திருந்து
சார்ந்தவர் சிந்திக்க
சூழ்நிலை அமைத்து
அசைவின்றி திமிராய்
அனாயாச திறன்களை
உளவியலில் இறக்கி
விளையாட்டு நடத்தி
சூழ்ச்சி செய்து
சூதாடி
நாடு பெண்
நல்லவை கெட்டவை
நித்தியம் நிதர்சனம்
எல்லாம் கவர்ந்து
கணம் கூட்டி
நிமிர்ந்து நீட்டி
நடை வீசிப்
புறம் பேசிப்
பொழுதில் ஒன்றாத
விழுதுகளைப் பழுது செய்து
பெருமரத்தின்
வீழ்ச்சிக்காக காத்திருந்து
மீண்டும் முரண்கூட்டி
கவிதை செய்து
காலட்சேபம் கரைந்து
கரைந்து போனதாய் காட்டி
கூடி இருந்து
முந்தைய
மேய்ப்பனை நினைந்து
பூஜை செய்து
பலபல படைத்து
பரிகாசம் அடக்கி
பணிந்து போனதாய் பிதற்றி
பிணம் நாடும்
இடம் தேடி
வேண்டாதன எவை
என அறிந்து
அவையும் சுவைத்தறிந்து
எக்காளமாய்
எத்தடையும் இன்றி
எதை நோக்கி
இந்தப் பாவப் பிழைப்பு ?






No comments:

Post a Comment